தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள பல படங்களில் நடித்து வருகிறார். இதில், அவர் நடித்த ‘அறம்’, ‘ஐரா’ ஆகிய படங்களை தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கோட்டபாடி ஜெ.ராஜேஷ், நயன்தாராவின் ஆடிட்டர் மற்றும் இன்றி அவரது நம்பிக்கைக்குரிய நெருங்கிய நண்பரும் கூட.
இவர்கள் நட்பில் தற்போது விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவை வைத்து சினிமாவுக்குள் நுழைந்த கோட்டபாடி ராஜேஷ், தற்போது பல பெரிய படங்களை தயாரித்து வரும் நிலையில், சமந்தாவை வைத்தும் ஒரு பிரம்மாண்ட படத்தை தயாரிக்க இருக்கிறார். எப்போதும் நயன்தாராவை முன்னிலைப்படுத்த கூடியவர் இந்த முறை வேறு ஒரு முன்னணி நடிகையிடம் சென்றதற்கு, நயன்தாராவுக்கும் ராஜேஷுக்கும் இடையே ஏற்பட்ட பிரிவு தான் காரணம் என்று கூறப்படுகிறது.
‘அறம்’ வெற்றியை தொடர்ந்து ‘அறம் 2’ தயாரிக்க ராஜேஷ் தயாராக இருந்தாலும், நயன்தாரா இதுவரை அவருக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. நயன்தாராவுக்காக காத்திருந்த ராஜேஷ், தற்போது சமந்தாவின் கால்ஷீட்டை வாங்கி படம் தயாரிக்க தொடங்கியிருப்பதால், நயன்தாரா ரொம்பவே அப்செட்டாகி விட்டாராம்.
அதே சமயம், தனக்கும் நயனுக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை. சமந்தா படம் அறம் தயாரிக்கும் போதே எடுக்கப்பட்ட முடிவு. நயன்தாரா எப்போது கால்ஷீட் கொடுத்தாலும், ‘அறம் 2’ தயாரிக்க நான் ரெடியாக இருக்கிறேன், என்று இந்த விவகாரம் தொடர்பாக ராஜேஷ் விளக்கம் அளித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ’ராகு கேது’...