அஜித்தின் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘நேர்கொண்ட பார்வை’ படம் இந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதேபோல், இந்த படத்தில் அஜித் தான் நடிக்க ஆசைப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததுதான். தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கும் அஜித், அப்படத்திற்குப் பிறகு, அதாவது அவரது 61 வது படம் குறித்து தனது ஆசையை தெரிவித்திருக்கிறார்.
அதன்படி, அஜித்தின் 61 வது படமும் ரீமேக் படமாக இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் விருது பெற்ற இந்தி படமான ‘ஆர்ட்டிக்கிள் 15’ படத்தை ரீமேக் செய்து நடிக்க அஜித் விரும்புகிறாராம். இப்படத்தின் உரிமையும் போனி கபூரிடம் இருப்பதால், உரிமையை வாங்க எந்த பிரச்சினையும் இல்லையாம். மேலும், போனி கபூரிடம் இருந்து வேறு ஒரு தயாரிப்பாளர் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்று அஜித்துக்காக தயாரிக்க இருக்கிறாராம்.
இப்படம் அஜித்தின் இமேஜுக்கு சரியாக இருப்பதோடு, வித்தியாசமான கதையாக இருப்பதால், நிச்சயம் ‘நேர்கொண்ட பார்வை’ போல பெரிய வெற்றி பெறும் என்று பலர் கருத்து தெரிவித்திருப்பதால், அஜித்தும் இப்படத்தில் நடிப்பதில் தீவிரமாக இருக்கிறாராம்.
தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 60 வது படத்தில் நடித்து வரும் அஜித், அப்படத்திற்கு பிறகு தனது 61 வது படமாக ‘ஆர்ட்டிக்கிள் 15’ படத்தில் நடிப்பதோடு, அதை வெங்கட் பிரவை இயக்க வைப்பார் என்றும் கூறப்படுகிறது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...