தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோவாக இருக்கும் விஜய், தனது மக்கள் மன்றம் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருவதோடு, தமிழகத்திற்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவும் தெரிவித்து வருகிறார். இப்படி பல செயல்கள் மூலம் நல்ல பெயர் எடுத்து வரும் விஜய்க்கு, அவரது உதவியாளர்கள் அல்லது அவருடன் இருப்பவர்களால், அவ்வபோது கெட்டப்பெயரும் ஏற்படுகிறது.
சமீபத்தில் விஜயின் உதவியாளர் மூத்த நடிகர் ஒருவரிடம் அநாகரீகமாக பேசி அவரை அவமானப்படுத்தியிருக்கும் சம்பவம் குறித்து தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் வேறு யாருமல்ல, தமிழக அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் முக்கிய நபராக விளங்கும் ராதாரவி தான். விஜய் மற்றும் அவரது குடும்பத்துடன் ராதாரவி நெருக்கமான உறவு கொண்டவர். விஜயை சிறு வயதில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பவர், விஜயை செல்லமாக விஜிமா என்று தான் அழைப்பார்.
அவரை தான் விஜயின் உதவியாளர் அவமானப்படுத்தியிருக்கிறார். அதாவது, ராதாரவியின் பேரன் தளபதியின் ரசிகராம். அவர் விஜயை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட, அதன்படி ராதாரவி தனது குடும்பத்தாரை விஜயை சந்திக்க அழைத்து சென்றிருக்கிறார். விஜயும் அவர்களுடன் பேசி, புகைப்படமும் எடுத்துக் கொண்டாராம். இது 8 வருடங்களுக்கு முன்பு நடந்ததாம்.
இதற்கிடையே, ‘சர்கார்’ பட விழாவின் போது ராதாரவி மயக்கமடைந்து கீழே விழ இருந்த போது விஜய் அவரை தூக்கி உட்கார வைத்திருக்கிறார். இதனால், விஜய்க்கு நன்றி தெரிவிக்க நினைத்த ராதாரவி, அவரை நேரில் சந்தித்து நன்றி கூற, அவரது உதவியாளரை தொடர்பு கொண்டு, அனுமதி கேட்டிருக்கிறார். அவரும், அதற்கு சம்மதம் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் சம்மதம் சொன்ன விதம் தான் ராதாரவியை மனமுடைய செய்திருக்கிறது. அவர் பேசிய வார்த்தைக்குப் பிறகு ராதாரவி விஜையை சந்திக்க போகவே இல்லையாம்.
”வாங்க, ஆனால் அன்று போல கூட்டத்தை கூட்டிட்டு வந்துடாதீங்க” என்று விஜயின் உதவியாளர் ராதாரவியிடம் சொல்லியிருக்கிறார். அன்று ராதாரவி அழைத்து சென்றது அவரது குடும்பத்தை, அவர் குடும்பத்தை கூட்டம் என்று விஜயின் உதவியாளர் அநாகரீகமாக பேசியதால் மனமுடைந்த ராதாரவி, அன்று முதல் விஜய் வீட்டு பக்கமே போவதில்லையாம்.

இதை, நடிகர் ராதாரவியே சமீபத்திய பேட்டி ஒன்று கூறியிருக்கிறார்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...