முதல் இரண்டு சீசன்களில் இல்லாத நாடக தன்மையும், நடிப்பும் மூன்றாவது சீசன் பிக் பாஸில் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் குறை கூறி வரும் நிலையில், லொஸ்லியா மற்றும் கவின் இடையிலான காதல் அதை உறுதி செய்யும் விதத்தில் இருந்தது. அதிலும், கவின், பார்க்கும் பெண்களை எல்லாம் ஆரம்பத்தில் காதலித்து பிறகு இறுதியாக லொஸ்லியாவை தனது காதல் வலையில் விழ வைத்திருக்கிறார். இதனை ஆரம்பத்தில் இருந்தே கண்டித்து வந்த சேரன், லொஸ்லியாவை தனது மகள் போல நினைத்ததால் என்னவோ, யார் என்ன சொன்னாலும், கவினிடம் இருந்து லொஸ்லியாவை காப்பாற்றுவதில் உறுதியாக இருந்தார்.
அவர், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்ட போது கூட, லொஸ்லியாவை கவினிடம் இருந்து காப்பாற்ற வேண்டும், என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார். ஆனால், சில ரசிகர்கள் அவருக்கு கவின் மீது கடுப்பு, என்று கூறினார்கள். பிக் பாஸ் போட்டியின் முன்னாள் போட்டியாளரான காஜல் கூட சேரனை கலாய்த்து ட்விட்டர் பதிவி ஒன்றை வெளியிட்டார்.
ஆனால், சேரனின் மகள் பாசம் நிஜம் என்பதை, இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த லொஸ்லியாவின் தந்தை உலகிற்கு புரிய வைத்துவிட்டார். காதல் மன்னனான கவினின் காதல் கதைகள் ஏராளமாக இருக்கிறது. பார்க்கும் பெண்களுக்கு எல்லாம் காதல் அம்பு விடும் கவினால் தன் மகளின் எதிர்காலம் பாதித்துவிடுமோ, என்ற பரிதவிப்பில் லொஸ்லியாவின் தந்தை கோபப்பட்டதோடு, தனது கண்களில் இருந்து வெளியே வர காத்திருந்த கண்ணீரை கஷ்ட்டப்பட்டு அடக்கிக்கொண்டு, மகளை எச்சரித்தார்.

லொஸ்லியாவின் சொந்த அப்பா இதை செய்தது பெரிய விஷமல்ல, இந்த நிக்ழ்ச்சியில் அறிமுகமாகி, தனது இரண்டு மகள் இருக்கிறார்கள், என்ற எண்ணத்தில் அவர்களுடைய வயதுடைய லொஸ்லியாவையும் தனது மகளாக நினைத்து, அவரது வாழ்க்கை வீணாக கூடாது என்று சேரன் காட்டிய அக்கறை பற்றி இன்று அனைத்து மக்களும் புரிந்துக்கொண்டிருப்பார்கள்.
அப்பாவின் அன்பு மகளாக மட்டும் லொஸ்லியாவை சேரன் பார்த்திருக்க மாட்டார், பல இன்னல்களை எதிர்கொண்டு வாழ்க்கையை தொலைத்திருக்கும் எத்தனையோ ஈழப் பெண்களுக்கான நம்பிக்கையாகவே அவரை பார்த்திருப்பார். அதனால் தான், யார் என்ன சொன்னாலும், வார்த்தையால் எப்படி அவமானப்படுத்தினாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவரை மகளாக பாவித்து அவருக்காக தொடர்ந்து பாசப்போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த போராட்டத்திற்கான வெற்றி அவருக்கு இன்று கிடைத்துவிட்டது.

VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...