ஓவியா இல்லாததால் பொலிவு இழந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் பொலிவானதாக்க நிகழ்ச்சி குழு பல முயற்சிகளை செய்தும் அது பயன் அளிக்கவில்லை. இதற்கிடையே, பிக் பாஸ் வீட்டில் இறுதிவரை தங்கி வெற்றி பெறும் முனைப்பில் போட்டியாளர்கள் இறங்கியுள்ளார்கள்.
இதில், எப்போதும் போல சினேகன், மற்றவர்களை தூண்டிவிட ஆரம்பித்திருக்கிறார். அதேபோல், தான் போட்டியில் வெற்றி பெற்றால் நூலகம் கட்டுவதாகவும், அதை கமலை வைத்தே திறப்பேன் என்றும் ஐஸ் வைத்தும் வருகிறார்.
மறு முனையில் சுஜா வாருணி, ஹாரிஸ் போன்றவர்கள் வெற்றிக்காக உண்மையாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனாலும், பிக் பாஸ் போட்டியாளர்களிடம் தற்போது போட்டியை காட்டிலும் பொறாமையே உள்ளதால், இனி வரும் காலங்களில் பிக் பாஸ் போட்டி பயரங்க விறுவிறுப்பாக இருக்கும்.
இந்த நிலையில், தற்போது போட்டியாளர்களில் சுஜா வாருணி மற்றவர்களால் கட்டம் கட்டப்படுகிறார். அதனால், கூடிய விரைவில் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...