ஓவியா இல்லாததால் பொலிவு இழந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் பொலிவானதாக்க நிகழ்ச்சி குழு பல முயற்சிகளை செய்தும் அது பயன் அளிக்கவில்லை. இதற்கிடையே, பிக் பாஸ் வீட்டில் இறுதிவரை தங்கி வெற்றி பெறும் முனைப்பில் போட்டியாளர்கள் இறங்கியுள்ளார்கள்.
இதில், எப்போதும் போல சினேகன், மற்றவர்களை தூண்டிவிட ஆரம்பித்திருக்கிறார். அதேபோல், தான் போட்டியில் வெற்றி பெற்றால் நூலகம் கட்டுவதாகவும், அதை கமலை வைத்தே திறப்பேன் என்றும் ஐஸ் வைத்தும் வருகிறார்.
மறு முனையில் சுஜா வாருணி, ஹாரிஸ் போன்றவர்கள் வெற்றிக்காக உண்மையாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனாலும், பிக் பாஸ் போட்டியாளர்களிடம் தற்போது போட்டியை காட்டிலும் பொறாமையே உள்ளதால், இனி வரும் காலங்களில் பிக் பாஸ் போட்டி பயரங்க விறுவிறுப்பாக இருக்கும்.
இந்த நிலையில், தற்போது போட்டியாளர்களில் சுஜா வாருணி மற்றவர்களால் கட்டம் கட்டப்படுகிறார். அதனால், கூடிய விரைவில் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...