’கயல் சந்திரன், பார்த்திபன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ வரும் செப்டம்பர் 27 அம தேதி வெளியாகிறது. டூ மூவி ஃபப்ஸ் (Two Movie Buff's) நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.டி.சி (SDC) தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
கிரிக்கெட் உலகக் கோப்பையை ஒரு கூட்டம் திருட நினைக்கிறது. அவர்கள் போடும் திட்டமும், அதனால் ஏற்படும் விளைவுகள் ஒரு பக்கம் இருக்க, அவர்கள் கோப்பையை திருடினார்களா இல்லையா, என்பதை இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளாக இருக்கும் வகையில் இப்படத்தை சுதர் இயக்கியிருக்கிறாராம்.
காட்சிக்கு காட்சி புதுமையாக இருக்கும் வகையில் வடிவமைத்திருக்கும் இயக்குநர், இப்படத்தில் இடம்பெறும் காட்சிகளை வேறு எந்த படத்திலும், எந்த வடிவிலும் பார்த்திருக்க முடியாது, என்று அடித்துக்கூறுகிறார்.
இப்படத்திற்காக மியூசியம் ஒன்றை வடிவமைத்திருக்கிறார்களாம். அது சேட் என்று தெரியாத வகையில் கலை இயக்குநர் வடிவமைத்திருக்கிறாராம். அதேபோல் ஒளிப்பதிவாளர் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளாராம்.
மொத்தத்தில், வித்தியாசமான பொழுதுபோக்கு படமாக உருவாகியிருப்பதாக கூறும் இயக்குநர் சுதிர், ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ ரசிகர்கள் கூட்டத்தை நிச்சயம் கவரும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்.
திரை இசை பாடல்களைப் போல் தற்போது சுயாதீன பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் முன்னணி இசையமைப்பாளர்கள் கூட தற்போது இதில் ஈடுபாடு காட்ட தொடங்கிவிட்டார்கள்...
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...