படம் வெளியான ஒரு சில மணி நேரங்களில், அபப்டங்களை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டு வந்த தமிழ்கன் என்ற இணையதளத்தின் உரிமையாளர் சற்று நேரத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார்.
இணையத்தில் புது படங்களை வெளியிடுபவர்களை விரைவில் கைது செய்வோம், அதற்கான் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணி போலீசார் திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டு வந்த நபரை கைது செய்துள்ளது. முதலில் இவர் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் அது தமிழ்கன் அட்மின் என விளக்கம் அளித்துள்ளனர்.
அவரது பெயர் கௌரிஷங்கர் எனவும், இவர் திருப்பத்தூரை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது. திருட்டு டிவிடிக்கு எதிராக பெறப்பட்ட முதல் வெற்றி என்றும், விஷாலின் அதரடி நடவடிக்கைகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும், திரைத்துறையினர் கூறி வருகிறார்கள்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...