தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகர்ஜூனாவுக்கு, தெலுங்கானா மாநிலம் பாப்பிரெட்டிகுடா என்ற கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த இடம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்தது.
இதற்கிடையே நாகர்ஜுனாவின் மனைவி நடிகை அம்லா, சில வாரங்களுக்கு முன்பு அந்த இடத்தை பார்வையிட்டு, அதில் விவசாய வேலைகளை தொடங்கினார். பண்ணையாட்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஷெட் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. போலீசார் சென்று பார்த்த போது, அந்த ஷெட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது.
அந்த பிணத்தை கைப்பற்றி போலீசார் பிரேதப் பரிசோத்னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த நபர் இறந்து 6 மாதத்துக்கு மேல் இருக்கலாம், என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருக்கும் போலீசார், நாகர்ஜுனாவின் குடும்படத்தாரிடமும் விசாரணை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...