நடிகை நயன்தாரா சில காதல் தோல்விகளுக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். தற்போது இருவரும் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம், விக்னேஷ் சிவனின் குடும்பத்தார் நயன்தாராவிடம் திருமணம் குறித்து அழுத்தம் கொடுத்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதனால் குழப்பமான மனநிலையில் இருக்கும் நயன்தாரா திருமணம் பற்றி தெளிவான முடிவு எடுக்காமல் இருந்தார். ஆனால், விக்னேஷ் சிவன் தரப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டார்களாம்.
இந்த நிலையில், சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாடிய நயன் தாரா, அந்த நாளிலேயே திருமணம் பற்றி முடிவையும் எடுத்துவிட்டாராம். அன்று இரவு விக்னேஷ் சிவனின் குடும்பத்தாருக்கு விருந்து கொடுத்த நயன்தாரா, டிசம்பர் மாதம் திருமணம் செய்துக்கொள்வதாக கூறிவிட்டாராம்.
கிறிஸ்துமஸ் மாதமான டிசம்பரில் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுவிட்டதாம். தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விக்னேஷ் சிவன் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல், நயன்தாரா - விக்னேஷ் சிவன், எளிமையான முறையில் வெளிநாட்டில் கிறிஸ்த்தவ முறைப்படி நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...