நடிகை நயன்தாரா சில காதல் தோல்விகளுக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். தற்போது இருவரும் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம், விக்னேஷ் சிவனின் குடும்பத்தார் நயன்தாராவிடம் திருமணம் குறித்து அழுத்தம் கொடுத்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதனால் குழப்பமான மனநிலையில் இருக்கும் நயன்தாரா திருமணம் பற்றி தெளிவான முடிவு எடுக்காமல் இருந்தார். ஆனால், விக்னேஷ் சிவன் தரப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டார்களாம்.
இந்த நிலையில், சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாடிய நயன் தாரா, அந்த நாளிலேயே திருமணம் பற்றி முடிவையும் எடுத்துவிட்டாராம். அன்று இரவு விக்னேஷ் சிவனின் குடும்பத்தாருக்கு விருந்து கொடுத்த நயன்தாரா, டிசம்பர் மாதம் திருமணம் செய்துக்கொள்வதாக கூறிவிட்டாராம்.
கிறிஸ்துமஸ் மாதமான டிசம்பரில் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுவிட்டதாம். தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விக்னேஷ் சிவன் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல், நயன்தாரா - விக்னேஷ் சிவன், எளிமையான முறையில் வெளிநாட்டில் கிறிஸ்த்தவ முறைப்படி நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...