Latest News :

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் காதல்! - கன்பார்ம் பண்ணிய ஷெரீன்
Wednesday September-25 2019

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 94 நாட்களை எட்டியுள்ளது. நேற்று சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த முன்னாள் போட்டியாளர்கள் மகத் மற்றும் யாஷிகா ஆனந்த், ஷெரீனை ஒரு கடிதம் எழுதம்படியும், அந்த கடிதம் ஒளிபரப்பு செய்யபடாது, என்றும் கூறினார்கள்.

 

இதனால், ஷெரீன் ஒரு காதல் கடிதம் எழுதினார். ஆனால், அந்த கடிதத்தை தர்ஷன் படிக்க வேண்டும், என்று பிக் பாஸ் கூறியதால், அதிர்ச்சியடைந்த ஷெரீன் கதை கிழித்து போட்டுவிட்டார். இதனால் அவர் யாருக்கு, என்ன எழுதினார் என்பத் தெரியவில்லை.

 

இந்த நிலையில், ஷெரீன் தர்ஷனுக்கு காதல் கடிதம் எழுதியிருப்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டும் இன்றி ஷெரீனின் கிழித்து போட்ட கடிதத்தின் துண்டுகளை எடுத்து தர்ஷன் ஒட்ட வைத்து படிக்க முயற்சிக்கிறார். அப்போது மற்ற போட்டியாளர்களும் அதை படிக்க முயற்சிக்கிறார்கள். அதற்கு ஷெரீன், “உனக்கு அந்த கடிதத்தை படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தால், என்னிடம் சொல்லியிருக்கலாம் நான் கொடுத்திருப்பேன், இல்லை வேறு எழுதி கொடுத்திருப்பேன், ஏன் இப்படி படுத்துற” என்று தர்ஷனிடம் கூறுகிறார்.

 

மேலும், சாண்டி வனிதா சொன்னது போல ஷெரீன் தர்ஷனை காதலிப்பதாக மறைமுகமாக சொல்கிறார். அதற்கு ஷெரீன் வெற்கப்படுவதோடு, தர்ஷானை காதலோடும் பார்க்கிறார்.

 

அதே சமயம், ஷெரீன் எழுதிய கடிதம் தர்ஷனுக்கு எழுதிய காதல் கடிதம் என்பது தெளிவாக கேமராவில் பதிவாகியிருப்பதால், அவர் தர்ஷனை காதலிப்பது கன்பார்மாகியுள்ளது. எனவே, இதன் மூலம் பிக் பாஸ் வீட்டில் மீண்டும் பரபரப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

 

Sherin Letter

 

இதற்கிடையே, தர்ஷனின் நடவடிக்கை பிடிக்காத அவரது காதலி சனம், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். காரணமாக அவர் தர்ஷனை பச்சை மிளகாய் சாப்பிட வைத்துவிட்டார் பிக் பாஸ் என்று கூறினாலும், ஷெரீனுக்காக அவர் பச்சை மிளகாய் சாப்பிட்டதாலயே சனம் கடுப்பாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Related News

5665

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery