சினிமா பிரபலங்கள் டிவிட்டர் இனி வேண்டாம் என்று வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில், நடிகை கஸ்தூரி ரொம்ப ஆக்டிவாக ட்விட்டரில் இயங்கி வருகிறார். சினிமா, அரசியல், சமூகம் என்று அனைத்து கருத்துக்களையும் தைரியமாக டிவீட்டி வரும் அவர், அவ்வபோது பல சர்ச்சையானவற்றையும் ட்வீட்டுகிறார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குறித்து டிவிட்டரில் கஸ்தூரில் கிண்டல் செய்யும் விதத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ட்வீட்டில், “பத்திரமாக இருங்க அமெரிக்கா. இது #NineEleven, இர்மா புயல், தற்போது #RGinUS(அமெரிக்காவில் ராகுல் காந்தி). பத்திரமாக இருங்க” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, டிவிட்டர் வேண்டாம் என்று அதில் இருந்து வெளியேறிய நிலையில், கஸ்தூரியின் இத்தகைய கலாய்ச்சலுக்கு பதில் அளிக்க மீண்டும் ட்வீட்டர் பக்கம் வருவாரா! என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பொருத்திருந்து பார்ப்போம், கஸ்தூரிக்கு குஷ்பு பதிலடி கொடுப்பாரா? என்று.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...