நடிப்பு மற்றும் அரசியல் என பிஸியாக இருக்கும் கமல்ஹாசன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா நடிகர் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மோசடி புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘உத்தமவில்லன்’ படத்தின் வெளியீட்டில் சில சிக்கல்களாக இருப்பதாக கூறிய கமல்ஹாசன் தன்னிடம் ரூ.10 கோடி பணம் வாங்கினார். அதற்கு பதிலாக அவர் தனது தயாரிப்பில் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக கூறினார். ஆனால், இதுவரை படமும் நடித்துக் கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை, என்று ஞானவேல்ராஜா தெரிவித்திருக்கிறார்.
இந்த புகாரால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் நடிகர் கமல்ஹாசனிடம் விரைவில் விசாரணை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...