நடிப்பு மற்றும் அரசியல் என பிஸியாக இருக்கும் கமல்ஹாசன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா நடிகர் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மோசடி புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘உத்தமவில்லன்’ படத்தின் வெளியீட்டில் சில சிக்கல்களாக இருப்பதாக கூறிய கமல்ஹாசன் தன்னிடம் ரூ.10 கோடி பணம் வாங்கினார். அதற்கு பதிலாக அவர் தனது தயாரிப்பில் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக கூறினார். ஆனால், இதுவரை படமும் நடித்துக் கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை, என்று ஞானவேல்ராஜா தெரிவித்திருக்கிறார்.

இந்த புகாரால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் நடிகர் கமல்ஹாசனிடம் விரைவில் விசாரணை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...