Latest News :

கவின் வெளியேறிய விவகாரம்! - ரசிகர்களை முட்டாளாக்கிய பிக் பாஸ்
Saturday September-28 2019

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிய உள்ள நிலையில், முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான கவின் ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. கவின் என்னதால் தவறு செய்தாலும், அவரை முதலிடத்திலேயே வைத்திருந்த ரசிகர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமாகவே அமைந்தது.

 

தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஷெரீன், லொஸ்லியா, தர்ஷன், முகேன், சாண்டி ஆகியோரில் முகேன் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்ட நிலையில், மற்ற இருவரில் கவினும் ஒருவராக இருப்பார், என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் திடீரென்று போட்டியில் இருந்து விலகியதற்கு காரணம், பணம் தான் என்று ஒரு தரப்பு கூறினாலும், இது நிகழ்ச்சியில் உள்ள ஸ்கிரிப்ட். இதை விஜய் தொலைக்காட்சி ஏற்கனவே முடிவு செய்துவிட்டது, என்றும் கூறுகிறார்கள்.

 

அதே சமயம், ஒரு நாளுக்கு ரூ.30 ஆயிரத்தை சம்பளமாக பெற்ற கவின், நிகழ்ச்சி முடிய இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்க, அந்த ஐந்து நாட்களுக்கு ரூ.1.50 லட்சம் மட்டுமே கிடைக்கும், ஆனால், அதைவிட அதிகமாக தற்போது 5 லட்சம் ரூபாய் கிடைக்க அதை எதற்காக விடவேண்டும், என்று நினைத்து வெளியேறும் முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

 

ஆனால், இது எல்லாமே வதந்தி தான். கவின் வெளியேறியது முழுக்க முழுக்க பிக் பாஸ் நிகழ்ச்சியாளர்களின் திட்டம் என்பதே உறுதியான தகவல். “உங்கள விட்டுட்டு நான் பின்னாடி இருப்பேனா, உங்கள காலி பண்ணிட்டு ஜெயிக்கப் போறேன் பாருங்க” என்று சாண்டி உள்ளிட்டவர்களில் சவால் விட்ட, கவின் 5 லட்சம் ரூபாய்க்காக வெளியேறும் ஆள் இல்லை. அதே சமயம், அவர் இதுநாள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்கு சம்பளமாக ரூ.28 லட்சத்திற்கு மேல் கிடைக்க இருக்கிறது. ஒரு வேளை இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்றிருந்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் உள்ள நிலையில், அவர் வெளியேறிவிட்டார் என்றால் அது முழுக்க முழுக்க ஏற்கனவே செய்யப்பட்ட செட்டப் மட்டுமே.

 

இப்படி, நாடகமாகவும், போட்டியாளர்களை நடிகர்களாகவும் வைத்து நடைபெறும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியும், அதில் பங்கேற்ற கவினும், அவரை நம்பிய ரசிகர்களை முட்டாளாக்கி விட்டனர்.

Related News

5678

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery