விஜயின் 64 வது படமான ‘தளபதி 64’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், அப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகி அது உறுதியும் செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்த தகவலை இன்று தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதற்கிடையே, விஜயின் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடையாமல் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளதால் படம் தீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் பிகில் படப்பிடிப்பில் விஜய் கலந்துக்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, ‘மெர்சல்’ படத்தில் இயக்குநர் அட்லீயின் அலட்சிய போக்கினால் தான் படத்தின் பட்ஜெட் அதிகரித்ததாகவும், அதனாப் படம் பெரிய வெற்றி பெற்றும் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டதாக பலர் குற்றம் சாட்டிய நிலையில், பிகில் படத்திலும் அதே தவறை இயக்குநர் அட்லி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஏஜிஎஸ் நிறுவனம் அட்லியின் மீது பெரும் கோபத்தில் இருந்தாலும், விஜய்க்காக அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
இந்த நிலையில், பிகில் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாமல் இருக்கும் தகவல் வைரலாகி ரசிகர்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே விஜயின் 64 வது படம் குறித்த அப்டேட் இன்று வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டும் அல்ல, பிகில் படத்திற்காக எடுக்க வேண்டிய காட்சிகள் மூன்று நாட்கள் படமாக்கப்பட உள்ளதால், இந்த மூன்று நாட்களும் ரசிகர்கள் மற்றும் மீடியாக்களை திசை திருப்புவதற்காக விஜயின் 64 வது படத்தின் அப்டேட்களை வெளியிடமும் விஜய் தரப்பு முடிவு செய்திருக்கிறார்களாம்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...