‘மாநாடு’ படத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதையடுத்து, ரூ.120 கோடி பட்ஜெட்டில் ‘மகா மாநாடு’ என்ற படத்தை எடுக்கப் போகிறேன், என்று கெத்தாக அறிவித்த சிம்பு, கடந்த இரண்டு மாதங்களாக வெளிநாட்டில் தங்கியிருந்துவிட்டு தற்போது சென்னைக்கு திரும்பியுள்ளார்.
சிம்பு வருகைக்காக அவர் மீது அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்க தயாரிப்பாளர் சங்கம் ஒரு புறம் காத்திருக்க, ரசிகர்களை அழைத்து சிம்பு பேசப்போகிறார், என்று அவர் சென்னைக்கு வருவதற்கு முன்பு வெளியான அறிவிப்பால் சில ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்தார்கள். இதனால், சிம்பு அதிரடியாக எதையோ அறிவிக்கப் போகிறார் என்று ஒட்டு மொத்த மீடியாவும் காத்துக் கொண்டிருக்க, சிம்பு வந்த தடமே தெரியாத வகையில் அவரது ஏரியா ரொம்பவே அமைதியாக இருக்கிறது.
சிம்புவின் இந்த அமைதி குறித்து விசாரிக்கையில், புலியாக பாய்ந்த சிம்பு தற்போது பூனையாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதைவிட ஆச்சர்யம் என்னவென்றால், ‘மாநாடு’ தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, மீண்டும் அந்த படத்தில் தானே நடிக்கிறேன், என்று சிம்பு சொல்ல இருக்கிறாராம். இது தொடர்பாக அவர் இயக்குநர் வெங்கட் பிரபுவை தொடர்பு கொண்டு பேச, அவருக்கு ஓகே, எப்போது வேண்டுமானாலும் தயாரிப்பாளரை சந்திக்கலாம், என்று கூறியிருக்கிறாராம்.
ஆனால், அடிபட்ட புலி போல சிம்பு இருப்பதால் அவரை வைத்து மாநாடு படத்தை எடுக்கலாமா அல்லது வேறு ஹீரோவை வைத்து படத்தை தொடங்கலாமா, என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி யோசித்துக் கொண்டிருக்கிறாராம். அதே சமயம், சிம்பு சந்தித்து சுரேஷ் காமாட்சியிடம் நேரடியாக மன்னிப்பு கேட்டால், அவரும் மனம் மாறி, பழையபடி சிம்புவின் ‘மாநாடு’ என்ற விளம்பரம் விரைவில் வரலாம் என்றும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
‘உங்களுடைய கதையை அடிப்படையாகக் கொண்டு…’ என்ற டேக்லைனுடன் ‘பிளாக்மெயில்’ படத்தின் டிரைலர் வெளியானபோதே ரசிகர்கள் இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர்...
நடிகர் சூர்யாவின் மாஸ் அவதாரத்தில் உருவாகி வரும் ‘கருப்பு திரைப்படத்தின் அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...