‘மாநாடு’ படத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதையடுத்து, ரூ.120 கோடி பட்ஜெட்டில் ‘மகா மாநாடு’ என்ற படத்தை எடுக்கப் போகிறேன், என்று கெத்தாக அறிவித்த சிம்பு, கடந்த இரண்டு மாதங்களாக வெளிநாட்டில் தங்கியிருந்துவிட்டு தற்போது சென்னைக்கு திரும்பியுள்ளார்.
சிம்பு வருகைக்காக அவர் மீது அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்க தயாரிப்பாளர் சங்கம் ஒரு புறம் காத்திருக்க, ரசிகர்களை அழைத்து சிம்பு பேசப்போகிறார், என்று அவர் சென்னைக்கு வருவதற்கு முன்பு வெளியான அறிவிப்பால் சில ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்தார்கள். இதனால், சிம்பு அதிரடியாக எதையோ அறிவிக்கப் போகிறார் என்று ஒட்டு மொத்த மீடியாவும் காத்துக் கொண்டிருக்க, சிம்பு வந்த தடமே தெரியாத வகையில் அவரது ஏரியா ரொம்பவே அமைதியாக இருக்கிறது.
சிம்புவின் இந்த அமைதி குறித்து விசாரிக்கையில், புலியாக பாய்ந்த சிம்பு தற்போது பூனையாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதைவிட ஆச்சர்யம் என்னவென்றால், ‘மாநாடு’ தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, மீண்டும் அந்த படத்தில் தானே நடிக்கிறேன், என்று சிம்பு சொல்ல இருக்கிறாராம். இது தொடர்பாக அவர் இயக்குநர் வெங்கட் பிரபுவை தொடர்பு கொண்டு பேச, அவருக்கு ஓகே, எப்போது வேண்டுமானாலும் தயாரிப்பாளரை சந்திக்கலாம், என்று கூறியிருக்கிறாராம்.
ஆனால், அடிபட்ட புலி போல சிம்பு இருப்பதால் அவரை வைத்து மாநாடு படத்தை எடுக்கலாமா அல்லது வேறு ஹீரோவை வைத்து படத்தை தொடங்கலாமா, என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி யோசித்துக் கொண்டிருக்கிறாராம். அதே சமயம், சிம்பு சந்தித்து சுரேஷ் காமாட்சியிடம் நேரடியாக மன்னிப்பு கேட்டால், அவரும் மனம் மாறி, பழையபடி சிம்புவின் ‘மாநாடு’ என்ற விளம்பரம் விரைவில் வரலாம் என்றும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...