‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வருவதோடு, கமலின் ‘இந்தியன் 2’, விக்ரமின் 58 வது படம் என்று முன்னணி ஹீரோக்கள் படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
மேலும், சுமார் அரை டஜன் படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியிருக்கும் பிரியா பவானி சங்கர் இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தனது சினிமா வண்டியை ஓட்டி வந்தவர், தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதாவது, விக்ரமின் 58 வது படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமான பிரியா பவானி சங்கர், தற்போது அப்படத்தி இருந்து விலகுவதாக படக்குழுவிடம் தெரிவித்திருக்கிறாராம். அவர் விலகுவது பெரிய விஷயம் இல்லை என்றாலும், அப்படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்க உள்ள நிலையில், இப்போது அவர் விலகுவதால், திடீரென்று எப்படி வேறு ஒரு ஹீரோயினை தேர்வு செய்வது என்பதில் தான் படக்குழு குழம்பி போனதோடு, அவர் மீது கடும் கோபமடைந்திருக்கிறார்கள்.
‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் இருக்கும் பிரியா பவானி சங்கரா, ‘விக்ரம் 58’ படத்திற்கு சரியாக கால்ஷீட் ஒதுக்க முடியவில்லையாம். நாளை படப்பிடிப்பு துவங்க நிலையில், பிரியா பவானி சங்கரால் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், படத்தில் இருந்தே விலகிக்கொள்வதாகவும் அவர் தரப்பில் இருந்து கூறப்படுகிறதாம்.
இப்படி திடீரென்று அவர் விலகுவதால், அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ‘விக்ரம் 25’ படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் புகார் கொடுக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.
‘உங்களுடைய கதையை அடிப்படையாகக் கொண்டு…’ என்ற டேக்லைனுடன் ‘பிளாக்மெயில்’ படத்தின் டிரைலர் வெளியானபோதே ரசிகர்கள் இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர்...
நடிகர் சூர்யாவின் மாஸ் அவதாரத்தில் உருவாகி வரும் ‘கருப்பு திரைப்படத்தின் அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...