Latest News :

பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு - சுஜா, சினேகன் இடையே கடும் போட்டி!
Wednesday September-13 2017

ஓவியா இல்லாத குறையை எப்படி எப்படியோ தீர்க்க நினைத்த பிக் பாஸ், தற்போது டாஸ்க் மூலமாக போட்டியை விறுவிறுப்பு அடையச்செய்துள்ளார்.

 

அதன் மூலம் நேற்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் படி, சிறிய கார்க்குள் அனைவரும் தங்க வேண்டும் என்று கூறப்பட்டது. யார் அதிக நேரம் தாக்குபிடித்து இருக்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர்கள் என்பது தான் போட்டியின் விதிமுறை.

 

இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரும் தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறிக் கொண்டதோடு நேற்றைய போட்டி முடிவடைந்தது.

 

இந்த நிலையில், நேற்றைய போட்டியில் காரில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற, சுஜா வாருணி மற்றும் சினேகன், வெற்றிக்காக நேற்று இரவு முழுவதும் காருக்குள்ளே இருக்கிறார்கள். உணவு, தண்ணீர் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் நேற்று இரவு மட்டும் அல்ல, இன்று காலை, மாலையும் அந்த காருக்குள்ளே இருக்கிறார்கள்.

 

எப்படியாவது போட்டியில் வென்றாக வேண்டும் என்று சினேகனும், சுஜா வாருணியும் கடுமையாக மோதிக்கொள்ளும் நிலையில், காரில் ஒரு காலில் நிற்க வேண்டும் என்று டாஸ்க்கை பிக் பாஸ் கடினமாக்க, அதையும் இவர்கள் செய்து வர, சினேகன் ஒரு இரண்டு கால்களால் நின்று சுஜாவை ஏமாற்றுகிறார. உடனே சுஜா கணேஷ் வெங்கட்ராமனிடம் தெரிவிக்க, கணேஷ் சினேகன் இரண்டு கால்களில் நிற்பதை தவறு என்று சொல்ல, அவருடன் சினேகன் சண்டை போடுகிறார்.

 

இப்படியாக கடுமையான எப்பிசோட்டக ஒளிபரப்பாக இருக்கும் இன்றைய பிக் பாஸி டாஸ்க்கில் வெற்றி பெற்றது சுஜாவா அல்லது சினேகனா என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.

Related News

570

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery