Latest News :

மீண்டும் சன் டிவியில் ராதிகா!
Thursday October-03 2019

வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ராதிகா, தொலைக்காட்சி தொடர்களிலும் தனக்கென்று தனி பாதை வகுத்து வலம் வந்தார். அவரது ‘சித்தி’ தொடர் தான், சீரியல்களுக்கான மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. 

 

சினிமா பாணியில் இரட்டை வேடங்களை புகுத்தி அசத்திய ராதிகா, தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் பல வெற்றி சீரியல்களை தயாரித்து நடித்து வந்தாலும், சமீபகாலமாக அவரது சீரியல்கள் அவ்வளவாக எடுபடவில்லை. இதனால், அவர் ஆரம்பித்து புதிய வரலாற்று சீரியலில் இருந்து பாதியில் விலகியவர், தான் மீண்டும் வருவேன், என்று மட்டும் சொல்லாமல் சொன்னார்.

 

இந்த நிலையில், ராதிகாவுக்கு மிகப்பெரிய வெற்றிக் கொடுத்த ‘சித்தி’ சீரியலின் இரண்டாம் பாகத்தை மிக பிரம்மாண்டமான முறையில் ராதிகா தயாரித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.விஜயன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த சீரியலில் பொன்வண்ணன், ரூபினி, நிஷாந்தி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

 

தற்போது இந்த சீரியலின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாம்.

Related News

5701

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery