தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உள்ள யோகி பாபு, ‘கூர்கா’, ‘தரமபிரபு’ ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில், தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ‘பட்லர் பாபு’ என்ற படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிப்பதாகவும், அவர் நடிக்கும் காமெடி காட்சிகளின் வசனங்களை இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் எழுதி கொடுப்பதாகவும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது.
ஆனால், இவை இரண்டையுமே மறுத்திருக்கும் யோகி பாபு, தனது பெயரில் மோசடி நடப்பதாக கூறியிருக்கிறார்.
இது குறித்து யோகி பாபு அளித்திருக்கும் விளக்கத்தில், “’தர்மபிரபு’, ’கூர்கா’ என இரண்டு படங்களில் தான் கதையின் நாயகனாக நான் நடித்துள்ளேன். அதன்பின் தொடர்ந்து காமெடியனாகத் தான் பல படங்களில் நடித்து வருகிறேன். பட்லர் பாலு என்ற படத்தில் காமெடியனாக எட்டு வருடங்களுக்கு முன்பு வெறும் நான்கு நாட்கள் மட்டும் தான் நடித்திருந்தேன். ஆனால் தற்போது நான் தான் அப்படத்தின் ஹீரோ என்பது போல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை.
மேலும் எனக்கு நகைச்சுவை சம்பந்தப்பட்ட வசனங்கள் யாரும் எழுதித்தருவதில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. இக்குநர்கள் தரும் வசனங்களை என் ஸ்டைலுக்கு ஏற்றவாறு சிறிதாக மாற்றிக்கொள்கிறேன். அந்த வேலையை நானே செய்துகொள்கிறேன். நகைச்சுவை பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.” என்று தெரிவித்துள்ளார்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...