தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கும் ‘அசுரன்’ படம் தொடர்பாக யார் என்ன பேசினாலும், படம் விமர்சனம் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. தனுஷ் ரசிகர்கள் மட்டும் இன்றி சினிமா விரும்பிகள் அனைவரும் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
படத்தில் நடித்த தனுஷை எப்படி பாராட்டுகிறார்களோ அதே அளவுக்கு அவரது மகன்களாக நடித்த டிஜே மற்றும் கென் கருனாஸையும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அதிலும், தனுஷின் இளையமகனாக படம் முழுவதும் வரும் கென் கருணாஸ், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போவதோடு, நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்.

காமெடி நடிகர், ஹீரோ, தயாரிப்பாளர், இசையமைப்பாளர் பாடகர் என்று சினிமாவில் பல துறைகளில் பயணித்து, தற்போதும் தொடர்ந்து நடித்துக் கொண்டே, எம்.எல்.ஏ பணியையும் மேற்கொண்டு வரும் கருணாஸின் மகனான கென்னுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடம் கிடைக்கும், என்று அசுரன் படத்தை பாராட்டும் அனைவரும் ஆரூடம் கூறுகிறார்கள்.
அப்பாவை போல இசை, நடனம் என அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருக்கும் கென், கதை தேர்வில் கவனம் செலுத்தினால் நிச்சயம் கோலிவுட்டின் டாப் ஹீரோ லிஸ்ட்டில் இடம் பிடிப்பார் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘அசுரன்’ படத்தில் தனுஷ் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சி, ஒரே டேக்கில் மூன்று கேமராக்கள் வைத்து படமாக்கப்பட்டதாம். 15 நிமிடம் நீளம் கொண்ட அந்த காட்சி படமாக்கப்பட்ட போது தனுஷின் அர்ப்பணிப்பை பார்த்து கென், மிரண்டு போய்விட்டாராம். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கென் பதிவிட்டுள்ளார்.

VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...