திருட்டு விசிடி மற்றும் இணையத்தில் சட்டவிரோதமாக புதுப்படங்களை பதிவேற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக விஷால் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று சென்னை திருவல்லிக்கேணி போலீசார், இண்டர்நெட்டில் புதுப்படங்களை பதிவேற்றும் செய்யும் நபர் ஒருவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘துப்பறிவாளன்’ நாளை (செப்.13) உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தை இண்டர்நெட்டில் வெளியாகமல் தடுப்பதற்காக விஷால் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, தியேட்டர்களில் இருந்து செல்போனில் படத்தை படம்பிடித்து நெட்டில் பதிவேற்றுவதை தடுப்பதற்காகவும், அப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுபவர்களை கண்காணித்து காவல் துறையினரிடம் ஒப்ப்டைப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்கள் மூலம் விஷால் பறக்கும் படை ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இவர்கள் ஐந்து பேர் கொண்ட குழக்களாக தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும், எல்லா காட்சிகளிலும் கண்காணிக்க உள்ளனர். இந்த பறக்கும் படையில் உள்ள விஷால் ரசிகர்களுக்கு பிரத்யேக பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாம்.
தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம்...
இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்...
அமேசான் மியூசிக், உன்னதமான இசையைக் கண்டடைந்த ஒரு புதிய ஆண்டைத் தொடங்கும் விதமாக, 2026 ஆம் ஆண்டு மற்றும் அதற்க்கும் மேலாக பல ஆண்டுகளாக தாக்கத்தை விளைவிக்கக் கூடியவர்களாக எதிர்பார்க்கப்படும் வளர்ந்துவரும் இசைக் கலைஞர்கள் அடங்கிய தனது ஸ்ட்ரீமிங் சேவைகளின் “அமேசான் மியூசிக்: 2026 கவனிக்கத்தக்க கலைஞர்கள்” வருடாந்திர பட்டியலை இன்று அறிவித்துள்ளது...