திருட்டு விசிடி மற்றும் இணையத்தில் சட்டவிரோதமாக புதுப்படங்களை பதிவேற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக விஷால் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று சென்னை திருவல்லிக்கேணி போலீசார், இண்டர்நெட்டில் புதுப்படங்களை பதிவேற்றும் செய்யும் நபர் ஒருவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘துப்பறிவாளன்’ நாளை (செப்.13) உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தை இண்டர்நெட்டில் வெளியாகமல் தடுப்பதற்காக விஷால் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, தியேட்டர்களில் இருந்து செல்போனில் படத்தை படம்பிடித்து நெட்டில் பதிவேற்றுவதை தடுப்பதற்காகவும், அப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுபவர்களை கண்காணித்து காவல் துறையினரிடம் ஒப்ப்டைப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்கள் மூலம் விஷால் பறக்கும் படை ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இவர்கள் ஐந்து பேர் கொண்ட குழக்களாக தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும், எல்லா காட்சிகளிலும் கண்காணிக்க உள்ளனர். இந்த பறக்கும் படையில் உள்ள விஷால் ரசிகர்களுக்கு பிரத்யேக பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாம்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...