Latest News :

பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
Thursday October-10 2019

‘மான்ஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலிவுட்டின் பிஸியான நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், ஒரு படத்தை தயாரித்து, ஹீரோவாகவும் நடிக்கிறார்.

 

ராதா மோகன் இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு தற்சமயம் ‘எஸ்.ஜே.சூர்யா 15’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

 

புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். கதிர் கலையை நிர்மாணிக்கிறார்.

 

Sj Surya and Priya Bhavani Shankar 2nd movie

 

இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இப்படத்தை 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் ரிலீஸ் செய்ய சூர்யா முடிவு செய்துள்ளார்.

Related News

5732

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery