Latest News :

அஜித் பாணியை பின்பற்றும் யோகி பாபு! - புலம்பும் தயாரிப்பாளர்கள்
Thursday October-10 2019

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக உருவெடுத்திருக்கும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடித்த ‘கூர்கா’ மற்றும் ‘தர்மபிரபு’ ஆகிய இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால், அவர் ஒரு காட்சியில் நடித்த படங்களில் கூட அரை ஹீரோ அளவுக்கு முன்னிலைப் படுத்தி விளம்பரம் செய்கிறார்கள்.

 

இதற்கு சமீபத்தில் அப்ஜக்‌ஷன் தெரிவித்த யோகி பாபு, தற்போது தான் எந்த படத்திலும் ஹீரோவாக நடிக்கவில்லை, அப்படி ஒரு செய்தி வெளியானால் அதை நம்ப வேண்டாம், என்று விளக்கம் அளித்திருந்தார்.

 

மேலும், ஒரு படத்தில் 11 கெட்டப்புகளில் நடித்து வரும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடிப்பதோடு, காமெடி வேடங்களிலும் தொடர்ந்து நடிப்பேன், என்றும் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார்.

 

தற்போது, யோகி பாபு ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்குவதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுவதோடு, ஏகப்பட்ட படங்களை கையில் வைத்திருப்பவர், தூங்குவதற்கு கூட நேரமில்லாமல் ஓடி...ஓடி...நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

 

இந்த நிலையில், நடிப்பில் பிஸியாக இருக்கும் யோகி பாபு, வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பதோடு, தான் நடிக்கும் படம் சம்மந்தமான நிகழ்வுகளையும் தவிர்க்க தொடங்கியுள்ளாராம். அதேதான், அஜித் செய்வது போலவே தான். தற்போது தான் நடிக்கும் படங்களில் தயாரிப்பாளர்கள் ”பத்திரிகையாளர் சந்திப்பு வைக்கலாம், தேதியும், நேரமும் சொல்லுங்க” என்று யோகி பாபுவிடம் கேட்டால், “அதெல்லாம் வேண்டாம், படத்தை முடிங்க, ரிலீஸுக்கு மூன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு மொத்தமாக ஒரு பிரஸ் மீட் வைங்க, அதில் வந்து கலந்துக்க முயற்சிக்கிறேன். மற்றபடி, டிவி ரிப்போர்ட்டர்கள், இணையதள ரிப்போர்ட்டர்கள், தினசரி பத்திரிகையாளர்கள் என தனி தனியாக வைக்க வேண்டாம். அப்படி வைத்தாலும் என்னை அழைக்காதீர்கள் நான் வர மாட்டேன், ஒரே ஒரு பிரஸ் மீட்டுக்கு மட்டும் நான் வருகிறேன், அதுவும் படம் ரிலீஸின் போது வைத்தால் மட்டுமே வருவேன்” என்று பதிலளிக்கிறாராம்.

 

மாஸ் ஹீரோவாக அஜித் தான் இப்படி பண்றாருனா காமெடி நடிகர்கள் கூட, இப்படி அஜித் பாணியை பின்பற்றினா, பிறகு படத்தை எப்படி தான் விளம்பரம் செய்வது, என்று தயாரிப்பாளர்கள் புலம்ப தொடங்கியிருக்கிறார்களாம்.

Related News

5734

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery