தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா, நடிப்பதோடு மட்டும் இன்றி பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். குறிப்பாக தனது அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களின் படிப்புக்கு பெரிதும் உதவி வருபவர், தாமாக முன் வந்து பலருக்கு பல உதவிகள் செய்து வருகிறார்.
அந்த வகையில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு தீபாவளிக்காக ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். இந்த நிதியை இயக்குநர் சங்கத்தின் செயலாளர் ஆர்.வி.உதயகுமார், சூர்யாவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
‘காப்பான்’ படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து வரும் சூர்யா, அப்படத்திற்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே...
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்...