கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘சித்து பிளஸ் 2’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சாந்தினி, தொடர்ந்து பட படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு, ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் வில்லியாக நடித்தும் மிரட்டினார்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சாந்தினி, சினிமா மட்டும் இன்றி சின்னத்திரை, வெப் சீரிஸ் என அனைத்து ஏரியாவிலும் பிஸியாக நடித்து வரும் நிலையில், தற்போது எஸ்.ஜே.சூர்யா தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதும் இயக்குநர்களில் முக்கியமானவராக இருக்கும் ராதாமோகன் இயக்கும் இப்படம் சாந்தினியின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருப்பதோடு, அவரது நடிப்பை வேறு தளத்தில் கொண்டு செல்லும் படமாகவும் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் சாந்தினி ஹீரோயினாக நடித்து வரும் படமும் முடியும் தருவாயில் உள்ளது. இப்படமும் சாந்தினியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...