விஜயின் ‘பிகில்’ தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், தமிழகத்தில் தணிக்கை செய்ய தாமதம் ஆகும் என்பதால், மும்பையில் தணிக்கை செய்வதற்கான பணியில் தயாரிப்பு தரப்பு ஈடுபட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் தணிக்கை செய்யப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கும் தயாரிப்பு தரப்பு, அதன் பிறகே ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்கள்.
இந்த நிலையில், பிகில் படத்திற்காக நள்ளிரவு 1 ஒரு மணிக்கு சிறப்பு காட்சிகள் போட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளார்களாம். தயாரிப்பாளர் தரப்பும் அதே முடிவில் தான் இருக்கிறார்களாம். காரணம், படத்தின் பட்ஜெட் மிகப்பெரியதாக இருப்பதால், போட்ட பணத்தை திரும்ப பெற வேண்டுமானால், இதுபோன்ற அதிகாலை காட்சிகள் போட்டால் தான் முடியும், என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு காட்சிகள் போட வேண்டும், என்று திட்டமிட்டிருக்கிறார்களாம்.
ஆனால், அரசு தரப்பில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுக்க கூடாது, என்று முடிவு எடுத்திருக்கிறார்களாம். ‘பிகில்’ படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டவுடன், அரசு தரப்பில் இருந்து திரைப்படங்களுக்கான சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதற்கான அறிக்கை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. இந்த தகவலால் பிகில் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே...
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்...