Latest News :

பாரத் யாத்ரா நடை பயணத்தை தொடங்கி வைத்த தனுஷ்!
Wednesday September-13 2017

கன்னியாகுமரியில் தொடங்கி புதுடில்லியில் முடியும் ஒரு விழிப்புணர்வு நடைபயணமாகும். இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைக்களுக்கு நடக்கும் சமூக குற்றங்களான பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர் முறை போன்றவற்றிலிருந்து குழந்தைகளை காப்பாற்றும் விழிப்புணர்வு நடை பயணமாக பாரத் யாத்ரா நடைபெறுகிறது. செப்டமபர் 11 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கும் இப்பயணம் அக்டோபர் 15 புதுடில்லியில் முடிவைடகிறது. வரையறுக்கப்பட்ட பாதையில் பாரத் யாத்ரா ஏறத்தாழ 22 மாநிலங்களில் 11,000 கிமீ பயணமாக நடைபெற்று வருகிறது. 

 

இன்று சென்னையில், ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் தலைமையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கொடியிடப்பட்டு நடை பயணம் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் நோபல் பரிசு பெற்ற ஸ்ரீ கைலாஷ் சத்யார்திஜி ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் மந்திரி மா.பா.பாண்டியராஜன் அவர்களும், டாக்டர். அன்புமனி ராமதாஸ் அவர்களும் கலந்து கொண்டனர். 

Related News

576

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery