கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகும் ‘கைதி’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், படத்தின் கண்டெண்ட் மற்றும் உருவான விதம். முழுக்க முழுக்க இரவில் நடக்கும் கதையம்சம் கொண்ட இப்படம் போல தமிழ் சினிமாவில் இதுவரை வந்ததில்லை, என்றே கூறப்படுகிறது.
தொழில்நுட்ப ரீதியாக மிரட்டலாக படம் வந்திருப்பதாகவும், அதே சமயம் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் கமர்ஷியலாகவும் படம் இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் பல முக்கிய திரையரங்கங்களும் கைதி படத்தை ரிலீஸ் செய்வதில் ஆர்வம் காட்டியிருப்பதால், படம் நிச்சயம் ரசிகர்களுக்கு சர்பிரைஸாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், ‘கைதி’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நரேன், படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறுகையில், “நான் போலீஸாக சில படங்களில் நடித்திருக்கிறேன், ஆனால், இந்த படத்தில் வரும் போலீஸ் வேடம் வித்தியாசமானது. இந்த படம் எடுக்கும்போதே, படம் சிறப்பாக வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இது ஒரு சில படங்களுக்கு தான் வரும். அதேபோல் படமும் மிரட்டலாக வந்துள்ளது.
கார்த்தி தனக்கு எது தேவை என்பதில் தெளிவாக இருகிறார். அவரது பட தேர்வுகளும் அதேபோல் தான் இருக்கிறது. படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை விறுவிறுப்பாகவே நகரும். அதேபோல், ஆக்ஷன், எமோஷன் என இரண்டுமே படத்தில் நிறைந்திருந்தாலும், அதை இயக்குநர் கமர்ஷியலாகவும் கொடுத்திருக்கிறார். இது கமர்ஷியல் படம் தான், ஆனால் வித்தியாசமான படம். நிச்சயம் ரசிகர்கள் ‘கைதி’ யை கொண்டாடுவார்கள்.” என்றார்.
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...