சினிமா, சின்னத்திரை மட்டும் இன்றி அரசியலில் பிஸியாக இருக்கும் குஷ்பு, அதே சமயம் தனது குடும்பத்தின் மீதும் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார். என்னதான் பிஸியாக நடித்தாலும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தனது குடும்பத்திற்காக ஒதுக்கியிருப்பவர், அந்த நாட்களில் கோடிகளை கொட்டினாலும், நடிக்க மறுத்துவிடுவார். அந்த அளவுக்கு அவர் தனது குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதா அரசியல் வாழ்க்கையில் பெற்ற வெற்றியை, குடும்ப வாழ்க்கையில் பெறவில்லையே ஏன்? என்று நடிகை குஷ்புவிடம் ரசிகர்கர் ஒருவர் கேட்டதற்கு, “பேராசை. தன்ன்னைவிட மற்றவர்களை அதிகமாக நம்பியது. அதனுடன், அனைத்திலும் தான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம். பழிவாங்கும் எண்ணம், இவற்றால் அதான் அவர் குடும்ப வாழ்க்கையில் தோல்வியடைந்திருக்க வேண்டும்” என்று பதில் அளித்துள்ளார்.
வார இதழ் ஒன்றில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கும் குஷ்புவின் ஜெயலலிதா பற்றிய இந்த பதிலால், அதிமுக பிரமுகர்கள் அவர் மீது செம கடுப்பில் இருப்பதாகவும் தகவல் கசிகிறது.
சினிமா மீதான ஆர்வத்தால் படிப்புக்கு ஏற்ற பணி மற்றும் நல்ல ஊதியத்தை கைவிட்டுவிட்டு, நடிகராக வேண்டும் என்று பலர் கோடம்பாக்கத்தில் முகாமிட்டு பல வருடங்களாக வாய்ப்பு தேடி வரும் நிலையில், சமூக வலைதளங்கள் பிரபலமாகும் பலர் சினிமாவுக்குள் எளிதியில் நுழைந்து விடுகிறார்கள்...
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என்...