சினிமா, சின்னத்திரை மட்டும் இன்றி அரசியலில் பிஸியாக இருக்கும் குஷ்பு, அதே சமயம் தனது குடும்பத்தின் மீதும் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார். என்னதான் பிஸியாக நடித்தாலும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தனது குடும்பத்திற்காக ஒதுக்கியிருப்பவர், அந்த நாட்களில் கோடிகளை கொட்டினாலும், நடிக்க மறுத்துவிடுவார். அந்த அளவுக்கு அவர் தனது குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதா அரசியல் வாழ்க்கையில் பெற்ற வெற்றியை, குடும்ப வாழ்க்கையில் பெறவில்லையே ஏன்? என்று நடிகை குஷ்புவிடம் ரசிகர்கர் ஒருவர் கேட்டதற்கு, “பேராசை. தன்ன்னைவிட மற்றவர்களை அதிகமாக நம்பியது. அதனுடன், அனைத்திலும் தான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம். பழிவாங்கும் எண்ணம், இவற்றால் அதான் அவர் குடும்ப வாழ்க்கையில் தோல்வியடைந்திருக்க வேண்டும்” என்று பதில் அளித்துள்ளார்.
வார இதழ் ஒன்றில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கும் குஷ்புவின் ஜெயலலிதா பற்றிய இந்த பதிலால், அதிமுக பிரமுகர்கள் அவர் மீது செம கடுப்பில் இருப்பதாகவும் தகவல் கசிகிறது.
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...
யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், மேலும் மேலும் இருளும், ஆழமும் , துணிச்சலுடனும் வளர்ந்து வரும் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தன்னை நிறுவி வருகிறது...