Latest News :

மீண்டும் ஒரு ‘பரூத்திவீரன்’! - உற்சாகத்தில் கார்த்தி
Monday October-21 2019

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ‘பரூத்திவீரன்’ மூலம் ஹீரோவாக அறிமுகமான கார்த்தி, தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய ஓபனிங்கை கொடுத்ததோடு, பிளாக் பஸ்டர் வெற்றியையும் கொடுத்தார். அறிமுகப்படத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றியை எந்த நடிகரும் கொடுத்ததில்லை, என்று ஒட்டு மொத்த கோலிவுட்டே பேசும் அளவுக்கு கார்த்தியின் அறிமுகம் அமர்க்களமாக இருந்தது.

 

பிறகு தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்த கார்த்தி, கிராமம், நகரம், ஆக்‌ஷன், காதல் என்று அனைத்துவிதமான படங்களுக்கும் பொருந்தும் நடிகராக உருவெடுத்தவர், பக்கத்து வீட்டு பையன் என்ற இமேஜோடு தனது ஒவ்வொரு படங்கள் மூலமாகவும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறார்.

 

தற்போது கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கைதி’ தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகிறது. அன்றைய தினம் மற்றொரு முன்னணி நடிகரின் படம் வெளியானாலும், வித்தியாசமான கதைக்களத்தோடு மட்டும் அல்லாமல் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய அனைத்து அம்சங்களும் நிறைந்த ஆக்‌ஷன் படமாக ‘கைதி’ உருவாகியுள்ளதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், திரையரங்க உரிமையாளர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

 

இந்த நிலையில், சமீபத்தில் ரசிகர்களை சந்தித்து பேசிய கார்த்தி, தனது ‘கைதி’ படம் பற்றி பேசும் போது, மீண்டும் ஒரு ‘பரூத்திவீரன்’ போல கைதி படம் இருக்கும். கதாபாத்திரமக கைதி படத்தின் கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது. அதனால் தான் இந்த படத்தில் நடித்தே. இது வித்தியாசமான படம் என்றாலும் ரசிகர்களுக்கான படமாகவும் இருக்கும், என்று உற்சாகமாக கூறியிருக்கிறார்.

 

ஏற்கனவே, படத்தில் நடித்தவர்கள் மட்டும் இன்றி விநியோகஸ்தர்களும் கைதி படம் மிகச்சிறப்பாக வந்திருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

5773

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

Recent Gallery