கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 கடந்த இரண்டு சீசன்களை காட்டிலும் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக சில காதல் விவகாரங்களும், சில பெண் போட்டியாளர்களின் சர்ச்சையான செயல்களும் இருந்தன.
அந்த வகையில், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்ற மாடலும், நடிகையுமான மீரா மிதுனின் மீது மோசடி புகார், கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் போலீஸ் நுழைந்தது. மேலும், சக போட்டியாளரான சேரன், தன்னை தவறாக தொட்டார் என்று மீரா மிதுன் புகார் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் மூலம் ரசிகரக்ள் வாக்குகள் அடிப்படையில் மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மீரா மிதுன், தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக எதையாவது பேசி வருகிறார். அந்த வகையில், சினிமா பிரபலங்கள் குறித்து பல ரகசியங்களை வெளியிடப்போவதாக வீடியோ ஒன்றின் மூலம் மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில், மீரா மிதுன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே தனக்கு திருமணமானதை மறைத்து மிஸ் சவுத் இந்தியாவில் வெற்றி பெற்றதால் அவரது பட்டம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்திருக்கும் மீரா மிதுன், திருமணம் ஒன்றே இதற்கு சரியான தீர்வாக இருக்கும். அதனால், தான் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும், தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும், சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...