Latest News :

‘பிகில்’ படத்திற்கு சிறப்புக் காட்சி! - இறுதி முடிவை வெளியிட்ட அமைச்சர்
Thursday October-24 2019

தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 25) விஜயின் பிகில் மற்றும் கார்த்தின் கைதி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின்றன. இதில், விஜயின் பிகில் படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட தயாரிப்பு தரப்பும் திட்டமிட்டிருந்த நிலையில், தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுத்துவிட்டது.

 

சிறப்பு காட்சி என்ற பெயரில் டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்வதால் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

இது குறித்து செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று எழுத்துப் பூர்வமாக உத்தரவாதம் கொடுத்தால், சிறப்பு காட்சி குறித்து ஆலோசனை செய்யப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

 

இதனால், விஜய் ரசிகர்கள் அப்செட்டானதோடு, பிகில் படத்திற்கு சிறப்பு காட்சி இருக்குமா, இருக்காதா என்பது தெரியாமல் பெரும் கவலையில் இருந்தார்கள். மேலும், ஏஜிஎஸ் நிறுவனமும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், ‘பிகில்’ படத்தின் சிறப்புக் காட்சி குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் படங்களுக்கு சிறப்புக் காட்சிகள் இல்லை, என்று உறுதியாக கூறிவிட்டார்.

 

அவர் வெளியிட்டுள்ள பதிவில், சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும், என்று தெரிவித்துள்ளார்.

 

ஆக, ‘பிகில்’ படத்திற்கு சிறப்புக் காட்சி கிடையாது. விஜய்க்கு எதிராக அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையால் ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகியிருக்கிறார்கள்.

Related News

5785

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

Recent Gallery