ரசிகர்களை கவர்ந்த இளம் ஹீரோயின்களில் பிரியா ஆனந்த் ஒருவர். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் இந்தி என்று பல மொழிப் படங்களில் நடித்து வந்த பிரியா ஆனந்த், திடீர் என்று தமிழ் சினிமாவில் காணாமல் போய்விட்டார். தற்போது ‘ஆதித்ய வர்மா’ படத்தில் நடித்திருப்பவர் மேலும் சில படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பிரியா ஆனந்த், தனக்கு அடுத்த ஆண்டு கல்யாணம் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
அதாவது, நிகழ்ச்சியில் பிரியா ஆனந்திடம், “எப்போது கல்யாணம்” என்று கேட்டதற்கு, ”நீங்கள் விரும்பினால் அடுத்த ஆண்டு எனக்கு தலை தீபாவளி தான்”, என்று ஜாலியாக கூறினார்.
பிரியா ஆனந்த் ஜாலியாக கூறியது தான், தற்போது அவருக்கு கல்யாணம் என்று வேகமாக பரவி வந்தாலும், பட வாய்ப்புகள் குறைந்ததால் ஒருவேளை அடுத்த ஆண்டு கல்யாணம் செய்துக்கொண்டு செட்டிலானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...