சின்னத்திரையில் சீரியல் மூலம் பிரபலமான வாணி போஜன், தற்போது வெள்ளித்திரையில் களம் இறங்கிவிட்டார். தமிழில் நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க தொடங்கியவர், தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா தயாரித்த படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
மேலும், தமிழில் ‘ஓ மை கடவுளே’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோவாக அசோக் செல்வன் நடிக்க, வாணி போஜன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், வாணி போஜன் அசோக் செல்வனுடன் கமிட்டாகி விட்டதாக தகவல் பரவி வருகிறது. அதற்கு ஏற்றவாறு அசோக் செல்வனும், வாணி போஜனுட்ன நெருக்கமாக செல்பி ஒன்றை எடுத்து தனது சமூக வலைதளத்தில் போட்டதோடு, அதில் வாணி போஜனை, ”செம அழகு” என்றும் வர்ணித்துள்ளார்.
இந்த புகைப்படம் வைரலாகி வருவதை தொடர்ந்து, அசோக் செல்வன், வாணி போஜன் காதலித்து வருவதாகவும் சோசியல் மீடியாவில் தகவல்கள் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த புகைப்படத்தை வெளியிட்ட சில மணி நேரங்களில் அசோக் செல்வம் மற்றொரு பதிவிட்டதால், காதல் செய்தி வெறும் கிசுகிசு என்று தெரிந்துவிட்டது.
அதாவது, ‘ஓ மை கடவுளே’ படத்தின் விளம்பரத்திற்காக தான் இப்படி ஒரு புகைப்படத்தையும், பதிவையும் வெளியிட்டதாக அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.
’கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ போன்ற மாபெரும் வெற்றி படங்கள் மூலம் இந்திய திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகவும், சாதனை படைப்புகளை தயாரிக்கும் நிறுவனமாகவும் பார்க்கப்படும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மற்றொரு பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது ‘காந்தாரா - சாப்டர் 1’...
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...