நடிகர் விஜயின் ‘பிகில்’ கடந்த 25 ஆம் தேதி வெளியானது. சில பிரச்சினைகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறததோடு, எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர், சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜய் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், அங்கு வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்தனர்.
மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார், அவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர், சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...