டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த விஷால், போராட்டதிலும் பங்கேற்றதுடன், தனது அறக்கட்டளை மூலம் விவசாயிகள் சிலரது குழந்தைகளில் படிப்புக்கும் உதவி செய்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது தனது ‘துப்பறிவாளன்’ படத்தின் தியேட்டர் கலெக்ஷனில் இருந்து ஒரு தொகையை விவசாயிகளின் நலனுக்காக கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சுமார் 350 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் துப்பறிவாளன் வெளியாகியுள்ளது. இந்த தியேட்டர்களில் துப்பறிவாளன் எத்தனைக் காட்சிகள் நடைபெறுகிறதோ, அத்தனைக் காட்சிகளிலும் விற்கும் ஒவ்வொரு டிக்கெட்டின் வருமானத்தில் இருந்து விஷாலுக்கு போகும் பங்கில் இருந்து, ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் என்று விவசாயிகளின் நலனுக்காக வழங்கப்பட உள்ளது.
விஷால் பிலிம் பேக்டரி மூலம் சொந்தமாக விஷால் தயாரித்துள்ள ‘துப்பறிவாளன்’ இன்று திரையிடப்பட்ட சிறப்பு காட்சிக்குப் பிறகு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...