டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த விஷால், போராட்டதிலும் பங்கேற்றதுடன், தனது அறக்கட்டளை மூலம் விவசாயிகள் சிலரது குழந்தைகளில் படிப்புக்கும் உதவி செய்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது தனது ‘துப்பறிவாளன்’ படத்தின் தியேட்டர் கலெக்ஷனில் இருந்து ஒரு தொகையை விவசாயிகளின் நலனுக்காக கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சுமார் 350 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் துப்பறிவாளன் வெளியாகியுள்ளது. இந்த தியேட்டர்களில் துப்பறிவாளன் எத்தனைக் காட்சிகள் நடைபெறுகிறதோ, அத்தனைக் காட்சிகளிலும் விற்கும் ஒவ்வொரு டிக்கெட்டின் வருமானத்தில் இருந்து விஷாலுக்கு போகும் பங்கில் இருந்து, ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் என்று விவசாயிகளின் நலனுக்காக வழங்கப்பட உள்ளது.
விஷால் பிலிம் பேக்டரி மூலம் சொந்தமாக விஷால் தயாரித்துள்ள ‘துப்பறிவாளன்’ இன்று திரையிடப்பட்ட சிறப்பு காட்சிக்குப் பிறகு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...