‘தர்பார்’ படம் முடிவடைந்து வெளியீட்டுக்கான வேலைகள் தொடங்கியிருக்கும் நிலையில், விரைவில் புதுப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் ஈடுபட உள்ளார்.
அதே சமயம், வரும் டிசம்பர் மாதம் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு வெளியாகும், என்றும் அவரது ரசிகர்கள் எதிர்ப்பரத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று பா.ஜ.க-வுக்கு எதிராக துணிச்சலான தனது முடிவை அறிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் கட்டிட திறப்பு விழா மற்றும் இயக்குநர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட ரஜினிகாந்த் பாலச்சந்தர் சிலையை திறந்து வைத்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ”திருவள்ளூவரைப் போல என் மீதும் காவி சயம் பூச முயற்சிக்கிறார்கள். திருவள்ளூவரும் சிக்க மாட்டார், நானும் சிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் இந்த ஸ்டேட்மெண்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...