Latest News :

பிக் பாஸ் காதல்! - மவுனம் கலைத்த சேரன்
Sunday November-10 2019

பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்த நிலையில், 4 வது சீசனுக்காக சேனல் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதே சமயம், மூன்றாவது சீசனில் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டவர்கள் தற்போது பல கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருவதோடு, சிலர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்கள்.

 

பிக் பாஸ் சீசன் 3-யில் இளசுகளின் காதல் தான் ஹைலைட்டாக அமைந்தது. குறிப்பாக கவின் - லொஸ்லியா காதலும், அதற்கு சேரன் தெரிவித்த எதிர்ப்பும், போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், லொஸ்லியாவின் அப்பா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, லொஸ்லியாவை திட்டி தீர்த்தார். அவரது இந்த செயலை பார்க்கும் போது சேரன், செய்தது சரிதான், என்று ரசிகர்கள் கருத்து கூறினார்கள்.

 

தற்போது பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்து போட்டியாளர்கள் பேட்டிகள் கொடுத்து வரும் நிலையில், சேரன் மட்டும் இதுவரை எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. மேலும், அவர் எதிர்ப்பு தெரிவித்த கவின் - லொஸ்லியா காதல் பற்றியும் எதுவும் பேசாமல் இருந்தார்.

 

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் தனது மவுனத்தை கலைத்து முதல் முறையாக கவின் - லொஸ்லியா பிக் பாஸ் காதல் பற்றி இயக்குநர் சேரன் பேசியுள்ளார்.

 

Kavin and Loslya

 

”கவினின் குடும்ப சூழல் எனக்கு தெரியும், லொஸ்லியாவின் குடும்பம் பற்றியும் தெரிந்துக் கொண்டே. அதனாலேயே அவர்கள் இருவரும் நெருக்கம் காட்டுவதை நான் விரும்பவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இருவருமே தங்களது வாழ்வில் அடுத்தக் கட்டத்திற்கு போக வேண்டும், என்று நான் விரும்பினேன். ஆனால், அவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தங்களது காதல் எதிர்காலத்தை பற்றி பேச தொடங்கிவிட்டார்கள். அதனால் தான் நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

 

ஆனால், இதை கவின் தவறாக புரிந்துக் கொண்டு நான் நடிக்கிறேன் என்று நினைத்துவிட்டார். ஆனால், வெளியே இருந்து பார்த்த ரசிகர்கள் என்னை நன்றாக புரிந்துக் கொண்டார்கள்” என்று சேரன் பேசியுள்ளார்.

Related News

5849

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

Recent Gallery