Latest News :

பிக் பாஸ் காதல்! - மவுனம் கலைத்த சேரன்
Sunday November-10 2019

பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்த நிலையில், 4 வது சீசனுக்காக சேனல் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதே சமயம், மூன்றாவது சீசனில் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டவர்கள் தற்போது பல கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருவதோடு, சிலர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்கள்.

 

பிக் பாஸ் சீசன் 3-யில் இளசுகளின் காதல் தான் ஹைலைட்டாக அமைந்தது. குறிப்பாக கவின் - லொஸ்லியா காதலும், அதற்கு சேரன் தெரிவித்த எதிர்ப்பும், போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், லொஸ்லியாவின் அப்பா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, லொஸ்லியாவை திட்டி தீர்த்தார். அவரது இந்த செயலை பார்க்கும் போது சேரன், செய்தது சரிதான், என்று ரசிகர்கள் கருத்து கூறினார்கள்.

 

தற்போது பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்து போட்டியாளர்கள் பேட்டிகள் கொடுத்து வரும் நிலையில், சேரன் மட்டும் இதுவரை எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. மேலும், அவர் எதிர்ப்பு தெரிவித்த கவின் - லொஸ்லியா காதல் பற்றியும் எதுவும் பேசாமல் இருந்தார்.

 

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் தனது மவுனத்தை கலைத்து முதல் முறையாக கவின் - லொஸ்லியா பிக் பாஸ் காதல் பற்றி இயக்குநர் சேரன் பேசியுள்ளார்.

 

Kavin and Loslya

 

”கவினின் குடும்ப சூழல் எனக்கு தெரியும், லொஸ்லியாவின் குடும்பம் பற்றியும் தெரிந்துக் கொண்டே. அதனாலேயே அவர்கள் இருவரும் நெருக்கம் காட்டுவதை நான் விரும்பவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இருவருமே தங்களது வாழ்வில் அடுத்தக் கட்டத்திற்கு போக வேண்டும், என்று நான் விரும்பினேன். ஆனால், அவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தங்களது காதல் எதிர்காலத்தை பற்றி பேச தொடங்கிவிட்டார்கள். அதனால் தான் நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

 

ஆனால், இதை கவின் தவறாக புரிந்துக் கொண்டு நான் நடிக்கிறேன் என்று நினைத்துவிட்டார். ஆனால், வெளியே இருந்து பார்த்த ரசிகர்கள் என்னை நன்றாக புரிந்துக் கொண்டார்கள்” என்று சேரன் பேசியுள்ளார்.

Related News

5849

’சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’ உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படமாக இருக்கும் - நடிகர் வெற்றி நம்பிக்கை
Monday July-21 2025

நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...

’ச்சீ ப்பா தூ...’ இசை ஆல்பத்தை பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்!
Monday July-21 2025

இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான  வாஹீசன் ராசய்யா எழுத்தில்,  சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...

Recent Gallery