ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிடுவதற்கான பணியில் லைகா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் டிசம்பர் 7 ஆம் தேதி, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த லைகா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இதில் இசையமைப்பாளர் அனிருத்தின் நேரடி இசை நிகழ்ச்சி உள்ளிட்ட சில கலை நிகழ்ச்சிகளோடு பிரம்மாண்டமான கலை விழா போல நடத்த லைகா நிறுவனம் திட்டமிட்டு வருகிறதாம்.
இத்துடன், எந்த திரைப்பட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத நயன்தாராவை இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சியிலும் ‘தர்பார்’ படக்குழு ஈடுபட்டுள்ளதாம்.
இது நடந்துவிட்டால் தமிழ் சினிமாவில் நடைபெற்ற மிகப்பெரிய அதிசயம் ‘தர்பார்’ இசை வெளியீட்டு விழாவாகத்தான் இருக்கும்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...