Latest News :

நடிகர் அதர்வா மீது பண மோசடி புகார்!
Wednesday November-13 2019

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவரான அதர்வா, ‘பரதேசி’, ‘ஈட்டி’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்ததை தொடர்ந்து ‘செம போத ஆகாத’ என்ற படத்தை தயாரித்து நடிக்கவும் செய்தார். மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்த இப்படத்திற்குப் பிறகு, இனி படம் தயாரிப்பில் ஈடுபடப்போவதில்லை என்று அதர்வா முடிவு செய்திருக்கிறார்.

 

இந்த நிலையில், பிரபல தயாரிப்பாளரான எக்ஸட்ரா எண்டர்டெயின்மெண்ட் வி.மதியழகன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் அதர்வா மீது பண மோசடி புகார் அளித்துள்ளார்.

 

புகார் மனுவில், அதர்வா நடித்த ’செம போத ஆகாதே’ என்ற திரைப்படத்தின் விநியோக உரிமையை ரூ.5.5 கோடிக்கு பெற்றேன். ஆனால் படம் வெளியாக தாமதமானதால் எனக்கு ரூ.5.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய பணம் இல்லாமல் ’மின்னல் வீரன்’ என்ற படத்தில் நடித்து தருவதாக அதர்வா கூறினார்.

 

ஆனால் ஒப்பந்தப்படி படம் நடித்துத் தராமல் அதர்வா ஏமாற்றியதால் இதுவரை ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

5862

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery