Latest News :

நடிகர் அதர்வா மீது பண மோசடி புகார்!
Wednesday November-13 2019

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவரான அதர்வா, ‘பரதேசி’, ‘ஈட்டி’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்ததை தொடர்ந்து ‘செம போத ஆகாத’ என்ற படத்தை தயாரித்து நடிக்கவும் செய்தார். மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்த இப்படத்திற்குப் பிறகு, இனி படம் தயாரிப்பில் ஈடுபடப்போவதில்லை என்று அதர்வா முடிவு செய்திருக்கிறார்.

 

இந்த நிலையில், பிரபல தயாரிப்பாளரான எக்ஸட்ரா எண்டர்டெயின்மெண்ட் வி.மதியழகன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் அதர்வா மீது பண மோசடி புகார் அளித்துள்ளார்.

 

புகார் மனுவில், அதர்வா நடித்த ’செம போத ஆகாதே’ என்ற திரைப்படத்தின் விநியோக உரிமையை ரூ.5.5 கோடிக்கு பெற்றேன். ஆனால் படம் வெளியாக தாமதமானதால் எனக்கு ரூ.5.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய பணம் இல்லாமல் ’மின்னல் வீரன்’ என்ற படத்தில் நடித்து தருவதாக அதர்வா கூறினார்.

 

ஆனால் ஒப்பந்தப்படி படம் நடித்துத் தராமல் அதர்வா ஏமாற்றியதால் இதுவரை ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

5862

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery