பைரசிக்கு எதிராக தயாரிப்பாளர் சங்க தலைவரான நடிகர் விஷால் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வர, கடந்த இரு தினங்களுக்கு முன்பு இண்டர்நெட்டில் புது படங்களை வெளியிடும் நபர் ஒருவரை போலீஸ் கைது செய்தது. இது விஷாலின் நடவடிக்கைக்கு கிடைத்த முதல் வெற்றி என்று கூறப்பட்டது.
இதற்கிடையே, மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் துப்பறிவாளன் ஓடும் திரையர்ங்குகளில் விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஒரு ரூபாய் விவசாயிகள் குடும்ப நலனுக்கு கொடுக்கப்படும் என்று விஷால் அறிவித்தார்.
இந்த நிலையில், விஷாலின் அறிவிப்பை கிண்டலடிக்கும் வகையில் இயக்குநர் சேரன் கருத்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கூறிய சேரன், “சங்கம் கொடுத்து வந்த தயாரிப்பாளர்கள் இன்சூரன்ஸ்க்கு பணம் கட்டாம 120 பேருக்கு கேன்சல் செய்ய சொல்லிவிட்டு விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் சூப்பர்ல...ஒரே ஸ்டண்ட் காட்சியா இருக்கே.
1.தமிழ் சினிமாவே நான் வரலைன்னா அழிச்சிருக்கும், 2.தமிழ் ராக்கர்ஸ் பிடிச்சாச்சு, 3.விவசாயிகளுக்கு ஒரு ரூபாய்.” என்று தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலின் போது இயக்குநர் சேரன் சரத்குமார் அணிக்கு ஆதரவு தெரிவித்து விஷால் அணியை கடுமையாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...