எப்போதும் கருப்பு கண்ணாடி அணிந்துக் கொண்டிருக்கும் இயக்குநரின் படங்கள் சில வெற்றி பெறுவதும், சில தோல்விடைவதும் சகஜமாக இருந்தாலும், அவரது அனைத்து படங்களும் ஒரே ஸ்டைலாக தான் இருக்கும். தற்போது உயரமான நடிகரை வைத்து அவர் இயக்கியுள்ள படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
புத்தகங்கள் படிப்பதில் தீவிரம் காட்டும் அந்த இயக்குநர், அவரிடம் பணியாற்றும் பெண் உதவி இயக்குநர்களை கசக்கி பிழிந்தெடுப்பதிலும் தீவிரம் காட்டுகிறாராம். இதனால், எந்த பெண் இயக்குநரும் ஒரு படத்திற்கு மேல் அவரிடம் பணியாற்ற முடியாதம். அந்த அளவுக்கு எப்போதும் ஒரே வேலை... வேலை...என்று படுத்தி எடுத்துவிடுகிறார், என்று அவரிடம் இருந்து வெளியேறிய பெண் இயக்குநர் ஒருவர் கூறி ரொம்ப கவலைப்படுகிறார்.
கருப்பு கண்ணாடி இயக்குநர் இயக்கும் ஒவ்வொரு படத்திற்கும் எப்படியாவது ஒரு பெண் இயக்குநரை பணியில் சேர்த்துக் கொள்வாராம், அப்படி சேர்த்துக்கொள்ளும் பெண் இயக்குநருக்கு அவர் வேலை வாங்கும் விதம் பிடிக்காமல், அந்த படம் முடிந்தாலோ அல்லது பாதியிலோ எஸ்கேப் ஆகிவிடுவார்களாம், இருந்தாலும் மனுஷன் சலைக்காமல் புதிதாக ஒரு பெண் உதவி இயக்குநரை சேர்த்துக்கொள்வாராம்.
மொத்தத்தில், கருப்பு கண்ணாடி அணியாமல் சில நேரம் இருந்தாலும் இருப்பாராம், ஆனால் பெண் உதவி இயக்குநர் இல்லாமல் இருக்கவே மாட்டார் என்றும் கூறுகின்றனர்
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...
Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ’ஜோ’ படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ’ஆண் பாவம் பொல்லாதது’...