Latest News :

பிக் பாஸ் சாண்டி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!
Monday November-18 2019

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடன இயக்குநரான சாண்டி, பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதால் அதிகம் பிரபலமாகிவிட்டார். பிக் பாஸில் ரன்னராக வந்த சாண்டிக்கு தனி ரசிகர்கள் வட்டமே உருவாகியுள்ளது.

 

இந்த நிலையில், சாண்டி குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள், பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்கிறார்கள். இதற்காக சிலர் கட்டணம் வசூலிப்பதும் உண்டு.

 

அந்த வகையில், சாண்டியும் தான் கலந்துக் கொள்ளும் பொது நிகழ்ச்சிகளுக்கு கட்டணம் வசூலித்து வருகிறார். அது தவறில்லை என்றாலும், ஆதரவற்ற குழந்தைகளுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகவும் சாண்டி ஒரு பெரிய தொகையை கேட்டிருப்பது தான் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

 

சென்னையில் உள்ள ஆதரவற்ற சிறுவர்கள் இல்லம், அக்குழந்தைகளுக்காக ஆண்டு தோறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் நடைபெறும் நடன நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சினிமா நடன இயக்குநர்கள் பங்கேற்பது வழக்கமான ஒன்றாம். அந்த வகையில், பிரபு தேவா, ராஜு சுந்தரம் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றிருக்கிறார்களாம்.

 

இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் சாண்டியை பங்கேற்க வைக்க நினைத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், சாண்டியை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்ல, அவர் உடனே தனது மனைவியிடம் பேச சொல்லிவிட்டாராம்.

 

அவர்களுடம், சாண்டியின் மனைவியிடம் பேசிய போது, அவரு சில லட்சங்களை கட்டணமாக கேட்டாராம். இது ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சி என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினாலும், அதைக் கேட்காத சாண்டி தரப்பு, கட்டணம் கொடுத்தால் தான் வர முடியும் என்று கராராக கூறிவிட்டார்களாம்.

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட சாண்டி, அப்போது கட்டணம் வசூலித்தாரா இல்லையா என்பது தெரியவில்லை என்றாலும், தற்போது அவர் இதை வைத்த சம்பாதிக்க முடிவு செய்துவிட்டார் போல.

Related News

5888

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery