Latest News :

எஸ்கேப்பான் காதலன்! - சீரியல் நடிகையின் திருமணம் நின்றுபோனது
Monday November-18 2019

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

இதற்கிடையே, நடிகை ரோஜாவுக்கு கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திருமணம் தள்ளிப் போவதாக கூறப்பட்டது.

 

இந்த நிலையில், பிரியங்காவை திருமணம் செய்துக்கொள்ள இருந்த அவரது காதலர், வெளிநாட்டுக்கு ஓடிவிட்டதால் அவரது திருமணம் நின்றுவிட்டதாம்.

 

ராகுல் என்பவரை நடிகை பிரியங்கா காதலித்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திடீரென்று இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணம் தள்ளிப்போனது.

 

ஆனால், கருத்துவேறுபாடு பெரிய பிரச்சினையாக வெடித்ததை தொடர்ந்து திருமணம் நின்றுவிட்டது. இதையடுத்து ராகுல் மலேசியாவுக்கு சென்றுவிட்டாராம். அவரை தொடர்புகொள்ள பிரியங்கா முயற்சித்து முடியாமல் போனதாம். பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு ராகுலை பிரியங்க தொடர்பு கொண்டு பேச, அதுவும் தோல்வியில் தான் முடிந்ததாம்.

 

Priyanka and Raghul

 

மொத்ததில், நடிகை பிரியங்காவின் திருமணம் நடக்காது, அது நிச்சயதார்த்ததோடு முடிந்துவிட்டதாக அவரே தெரிவித்துவிட்டார்.

Related News

5894

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery