தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, தற்போது கதையின் நாயகனாகவும் நடிக்க தொடங்கியுள்ளார். அவர் ஹீரோவாக நடித்த ‘தர்மபிரபு’, ‘கூர்கா’ ஆகியப் படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, யோகி பாபுக்கு ஹீரோ வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.
ஹீரோவாக நடித்தாலும் தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வரும் யோகி பாபு, தற்போது வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார்.
சில படங்களில் வில்லன்களின் அடியாட்களில் ஒருவராக யோகி பாபு நடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரத்தை காமெடியாக கையாண்டிருப்பார். ஆனால், தற்போது அவர் ஏற்றிருக்கும் வில்லன் வேடம் சீரியஸ் ரகமாம்.
சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் தான் யோகி பாபு வில்லனாக நடிக்கிறார். இதுவரை சந்தானம் நடித்த படங்களிலேயே அதிகமான காமெடி கொண்ட படமாக உருவாகும் ‘டிக்கிலோனா’ படத்தில் யோகி பாபுவின் வில்லத்தனத்தில் காமெடி கலந்திருந்தாலும், அவரை வில்லனாகவும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தில் படம் உருவாக உள்ளதாம்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக ரசிகர்களை கவர்ந்த நாகேஷ், கவுண்டமணி ஆகியோர், ஒரு சில படங்களில் வில்லனாக நடித்திருக்கும் நிலையில், தற்போது அதே பாதையில் வில்லன் அவதாரம் எடுத்திருக்கும் காமெடி நடிகர் யோகி பாபுவின் வில்லத்தனத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா, இல்லையா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.a
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...