‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் இணைந்த மாதவன் - விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைகிறார்கள். ஆனால், இப்போது இணைவது படத்தில் நடிப்பதற்காக அல்ல, ஒரு படத்தின் புரோமோஷனுக்காக.
சதராஜ், வரலட்சுமி சரத்குமார், கிஷோர், விவேக் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற படத்தை சர்ஜுன் கே.எம் இயக்குகிறார். சி.பி.கணேஷின் டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தர் அண்ணாமலை நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைக்கும் இப்படம் க்ரைம் திரைல்லர் ஜானர் படமாகும்.
இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இதில், படத்தின் டிரைலரை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்திலும், நடிகர் விஜய் சேதுபதி தனது பேஸ்புக் பக்கத்திலும் வெளியிடுகிறார்கள்.
இப்போது புரிந்ததா ‘விக்ரம் வேதா’ கூட்டணி மீண்டும் இணைவதற்கு எதற்காக என்று!
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...
Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ’ஜோ’ படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ’ஆண் பாவம் பொல்லாதது’...