‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் இணைந்த மாதவன் - விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைகிறார்கள். ஆனால், இப்போது இணைவது படத்தில் நடிப்பதற்காக அல்ல, ஒரு படத்தின் புரோமோஷனுக்காக.
சதராஜ், வரலட்சுமி சரத்குமார், கிஷோர், விவேக் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற படத்தை சர்ஜுன் கே.எம் இயக்குகிறார். சி.பி.கணேஷின் டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தர் அண்ணாமலை நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைக்கும் இப்படம் க்ரைம் திரைல்லர் ஜானர் படமாகும்.
இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இதில், படத்தின் டிரைலரை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்திலும், நடிகர் விஜய் சேதுபதி தனது பேஸ்புக் பக்கத்திலும் வெளியிடுகிறார்கள்.
இப்போது புரிந்ததா ‘விக்ரம் வேதா’ கூட்டணி மீண்டும் இணைவதற்கு எதற்காக என்று!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...