Latest News :

துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட பிரபல நடிகை - போலீசில் புகார்
Friday September-15 2017

மலையாள நடிகை பாவனாவை கடத்தி கற்பழித்த வழக்கே முடியாத நிலையில், பிரபல மலையாள நடிகையை துப்பாக்கி முனையில் ஒருவர் மிரட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மலையாள நடிகர் ஜோஸ் - ரத்னபிரபா தம்பதியரின் மகள் பிரணிதி. இவர் கம்பீரம், 4 ஸ்டூடன்ஸ், குரு தேவா, வணக்கம் தலைவா, காற்று உள்ளவரை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்த நிலையில், கடந்த் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.

 

இந்த நிலையில், அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் தளசேரியில் அவரது தாத்தா வீட்டிற்கு வந்த போது, பிரணிதியின் மாமா சொத்து பிரச்சினையால், பிரணிதியை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக கூறப்படுகிறது.

 

உடனே தளசேரி போலீஸ் ஸ்டேஷனில் தனது மாமா மீது புகார் அளித்த பிரணிதி, கடந்த சில தினங்களாகவே மாமா தன்னை மிரட்டி வந்ததாகவும், சமீபத்தில் தாத்த வீட்டிற்கு வந்து துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக, புகார் மனுவில் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related News

591

’தாரணி பட விழாவில் விஜயை விமர்சித்த நடிகர் விஜய் விஷ்வா!
Tuesday October-28 2025

மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...

’கசிவு’ த்ம திருப்திக்காக நடித்த படம் - எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி
Tuesday October-28 2025

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...

’ஆண் பாவம் பொல்லாதது’ நாயகியை வர்ணித்த இயக்குநர் மிஷ்கின்!
Tuesday October-28 2025

Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர்  கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ’ஜோ’ படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ’ஆண் பாவம் பொல்லாதது’...

Recent Gallery