மலையாள நடிகை பாவனாவை கடத்தி கற்பழித்த வழக்கே முடியாத நிலையில், பிரபல மலையாள நடிகையை துப்பாக்கி முனையில் ஒருவர் மிரட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள நடிகர் ஜோஸ் - ரத்னபிரபா தம்பதியரின் மகள் பிரணிதி. இவர் கம்பீரம், 4 ஸ்டூடன்ஸ், குரு தேவா, வணக்கம் தலைவா, காற்று உள்ளவரை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்த நிலையில், கடந்த் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில், அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் தளசேரியில் அவரது தாத்தா வீட்டிற்கு வந்த போது, பிரணிதியின் மாமா சொத்து பிரச்சினையால், பிரணிதியை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக கூறப்படுகிறது.
உடனே தளசேரி போலீஸ் ஸ்டேஷனில் தனது மாமா மீது புகார் அளித்த பிரணிதி, கடந்த சில தினங்களாகவே மாமா தன்னை மிரட்டி வந்ததாகவும், சமீபத்தில் தாத்த வீட்டிற்கு வந்து துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக, புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...