நாசர் நடித்து இயக்கி தயாரித்த ‘அவதாரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான பாலாசிங், மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
‘அவதாரம்’ படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது.
அதன்படி, ’புதுப்பேட்டை’, ‘இந்தியன்’, ’பிரிவோம் சந்திப்போம்’, ‘கிரீடம்’, ’உதயா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். வில்லன், குணச்சித்திரம் என்று அனைத்து வேடங்களிலும் நடித்து வந்தார்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகர் பாலாசிங்கை, அவரது குடும்பத்தார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
நடிகர் பாலாசிங்குக்கு தற்போது 67 வயதாகிறது. அவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் ஆகும். இவர் முதலில் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அங்கு சுமார் பத்து படங்களில் நடித்த பிறகே தமிழில் நடிகராக அறிமுகமானார்.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...