‘காற்று வெளியிடை’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் மல்டி ஆர்டிஸ்ட் படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படம் குறித்து கடந்த ஒரு மாதமாக பல தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இன்று இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார்.
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் மணிரத்னம் தயாரித்து இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.
பிரம்மாண்டமான முறையில் தயாராக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்குகிறது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...