சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மற்றும் நடிகை மகாலக்ஷ்மி இடையே உள்ள கள்ளத் தொடர்பு குறித்து செய்திகள் தான் தற்போதைய ஹாட் டாப்பிக்காகியுள்ளது. இந்த சம்பவத்தால் சீரியல் உலகே பெரும் பரபரப்பில் இருக்க, நடிகர் ஈஸ்வருக்கு மகாலக்ஷ்மியை தவிர மேலும் இரண்டு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக, அவரது மனைவி நடிகை ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
மேலும், ஈஸ்வர் குறித்து போலீஸில் புகார் அளித்தது ஜெயஸ்ரீ இல்லையாம். ஈஸ்வரால் தாக்கப்பட்டு மயக்க நிலையில் ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, மருத்துவமனை நிர்வாகம் தான் போலீஸில் புகார் அளித்திருக்கிறது.
இந்த நிலையில், இந்த பிரச்சினை குறித்து பேட்டி அளித்திருக்கும் ஜெயஸ்ரீ, மகாலக்ஷ்மியுடன் மட்டும் இல்லாமல் மேலும் இரண்டு பெண்களுடன் ஈஸ்வருக்கு தொடர்பு இருப்பதாகவும், அதில் ஒருவர் நடிகை என்றும் தெரிவித்துள்ளார்.
தனக்கு திருமணமானவுடன், குழந்தை பெற்றுக் கொள்ள ஈஸ்வர் குடும்பத்தார் வற்புறுத்தியதோடு, தனது டிவி கேரியரே முடிந்துப் போகும் விதமாக செய்துவிட்டார்கள், என்று குற்றம் சாட்டியிருக்கும் ஜெயஸ்ரீ, ஈஸ்வர் தன்னை பல முறை கொடுமை படுத்தி வந்ததோடு, தன்னைப் பற்றி வெளியில் தவறாக பேசி வருகிறாராம். மேலும், தனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி, விவாகரத்து கேட்டு தினமும் அடிப்பதாகவும், தெரிவித்துள்ளார்.
நடிகை ஜெயஸ்ரீ ஈஸ்வர் பற்றி, அடுக்கடுக்கான புகார்களை கூறி வர, இதற்கு ஈஸ்வர் மறுப்பு தெரிவிக்கும் முறை எப்படி இருக்கும், என்பது தான் பெரிய எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...